Wikipedia

Search results

Sunday, 8 July 2018

Hormones...are very dangerous...

மன அழுத்தம் எப்டி நம்ம உடம்புக்கு நோய் நிலைகளை உண்டக்குது?

மன அழுத்தத்துல இருக்கும் போது நம்மளோட உடம்புல cortisol,adrenaline இது போல hormone ங்களோட சுரப்பு இருக்கும்..


இது பொதுவா ரொம்ப பயம் இருக்கும்போதோ,ஒரு நாய் நம்மள தொரத்தும் போதோ அவங்ககிட்ட ஒருந்து காப்பாத்திக்க தொல பொல தொல பொலன்னு ஓடுறதுக்கு ஒரு அசுர வேகத்த குடுக்குறத்துக்கு காரணமே அந்த hormones தான்...
இப்டி பட்ட ஹார்மோன்..நம்ம உடம்புல அடிக்கடி சரந்து நம்ம இரத்தத்துல  கலந்து ,நோய் எதிர்ப்பு சக்திய தர செல்கள செயலிலக்க செய்றதுனால,மன அழுத்ததுல இருக்கவங்க அதிகமான நோய்க்கு உள்ளாகுறாங்க...


பரம்பரையாகவோ,நோய் தொற்றின் காரணமாகவோ,சுய செல்களை அழிக்கும் காரணிகளாலோ,சுத்தமான சுற்றுசூழல் இல்லாத காரணத்தினாலோ,ஊட்டச்சத்து குறைவுபாடினாலோ,இல்லை உணவே கிடைக்காத்தாலோ...உண்டான நோய்களெல்லாம் மன அழுத்தம் என்ற காரணத்தினாலேயும் உண்டாகின்றன...

சோ அண்ட் சோ ,மனச அமைதியா வச்சுக்கோங்க...(நீ என்னம்ம ஈசியா சொல்லிபுட்டன்னு சொல்லாதிங்க)

முடிஞ்ச அளவு,சைட்டுகளை சைட்டுகளோடு நிப்பாட்டி விட்டு காதலுக்கு கொண்டு செல்லாமலும்,டீச்சர் திட்டுனத வகுப்பறைலயே விட்டுட்டு வந்தும்,புருஷன் பொண்டாட்டி சந்தேகத்துக்கு இடமில்லாம நடந்துகிட்டாலும்,நீங்கள் நினைப்பதாகவே அடுத்தவர்கள் இருக்க வேண்டும் என்று நினையாமலும்,கொஞ்ச கற்பனா சக்தியை அடக்கி கொண்டாலும்

சரியான நேரத்துல சாப்ட்டு,மொபைல் நோண்டாம நேரத்துக்கு தூக்கம்,யோகா,தியானம் போன்றவைகளினால் ஓரளவுக்கு மன அழுத்ததிலிருந்து விடைபெறலாம்..

Sunday, 1 July 2018

மூன்று மூலிகைகள் மற்றும் பயன்கள்

திப்பிலி(கோழையறுக்கி)




திப்பிலி பொடியை மூவிரல் அளவும் ,கம்மாறு வெற்றிலைச்சாறும்,தேனும்
கலந்து உட்கொள்ள கோழை ,இருமல்,சுரம் தீரும்..
திப்பிலி பொடியை தேனில் குழைத்து ஒரு மாதம் சாப்பிடத் தேமல் நீங்கு...


பேய் மருட்டி-பெருந்தும்பை


இலை கஷாயத்தை வாந்திபேதி,சுரம்,இருமலுக்கு கொடுக்கலாம்...இலைச்சாற்றை "பல் முளைக்கும் போது ஏற்படும் பேதிக்கு உள்ளுக்கு  கொடுக்கலாம்.."

சுரத்தில் ஆவிபிடிக்கவும் பயன்படுத்தலாம்
..

சிறு குறிஞ்சான்(சக்கரைக் கொல்லி)



இதன் இலைகளை மென்று தின்றுவிட்டு பின் இனிப்பு பொருட்களை சாப்பிட்டால் அதன் சுவையிராது...கைப்பு சுவையும் தெரியாது..

சுரத்திற்கும்,அக்கரத்திற்கும்(வாயிலுண்டாகும் புண்) நல்லது...

சுரத்திற்கு இதன் இலையை குடி நீரிட்டு கொடுக்கலாம்..

இலையை விளக்கெண்ணையில் வதக்கி நெறிக்கட்டிகளுக்கு வைத்து கட்டலாம்...

Thursday, 1 February 2018

ஆல்கஹால் முதல் ஆன்ட்ராய்டு வரை..

       நட்பு 👬என்பதால் ஒரே ஊசி கொண்டு குத்தி போதை ஏற்றிக்கொள்கிறாய்.....நோயையும் வாங்கிக் கொள்கிறாய்...உன் அன்பு மனைவிக்கும்💏ஆசைக்குழந்தைக்கும்👶👶🚼🚺🚹 பரிமாறுகிறாய்...உன் வம்சத்தையையே அழித்து விடுகிறாய்❌❌❌..
     ஆடி அடங்கிய பி்ன் வைத்தியம் பார்க்க வைத்தியம் பார்க்க மருத்துவ மனை ஏறி ஏறி இறங்குவாய்♿♿..உன் நரம்பெல்லாம் நாராய் போனபின்பு வைத்தியம் பார்த்து என்ன பலன்💦💦💦💦💦
       வயதை இழந்தப்பின் வருந்தியும் பலன் இல்லை🔊...உன் ஆன்மாவுக்கென்று அளிக்கப்பட்ட உடலை போதைக்கு அடிமையாக்கி அழிக்காதே...
   
      ஆயிரம் புத்திமதியெல்லாம் தேவையில்லை❎...உன் அரை நொடி சிந்தனை போதும்✅✅...

     
       உன் நண்பனை போதைக்கு அடிமையாகமல் பார்த்துக்கொள்🙏😿👬👫👬👭...விடுவிக்க முயற்சி செய்....
      உன் அறிவை மழுங்க வைக்கும் எந்த போதையும் வேண்டாம்🚫❎📵 ஆன்ராய்டு வரை......




#say_no_to_drugs🔊
#stop_transfer_HIV🔊
#B_A_MAN🔊
#B_A_WOMAN🔊

யோகமும் நலமும்

பதஞ்சலி அள்ளிக்கொடுத்த அருள் கொடையாம் ஆசனங்கள்...


உடம்பை வளர்த்தேன்..உயிர் வளர்த்தேனே-திருமூலர்...
உடலில் தான் உயிர் குடிக்கொண்டுள்ளது....
உடலை வளர்க்கும் முறைகளில் ஒன்றே  நம் ஆசனங்களும்...
மோடி ஒரு கேடி.. எது சொன்னாலும் தப்பாதான் இருக்கும்னு ஒரு நம்பிக்க நமக்குள்ள...சில நேரம் சிலத மட்டும் கொஞ்சம் ஒழுங்கா பண்ணாருனா அது யோகா தினம் தான்...
நம்ம முன்னோர்கள் நமக்காக  சொல்லிக்கொடுத்தது...



காலை எழுந்ததும் ஒட்டு மொத்த நாள் புத்துணர்ச்சிக்கும் சூரிய வணக்கம்....
அமைதி உணர்வை பெற பத்மாசன தியானம்..
அறிவை பெருக்கிக்கொள்ள வஜ்ராசன தியானம்...
மனதை ஒருங்கிணைக்க பர்வட்டாசனம்...
வயிற்றுப்பகுதியை சீராக்கும் யோகமுத்ரா மற்றும் தனுராசனம்...
இடுப்பையும் கால்களையும் சீராக்க பவன முத்தாசனம் மற்றும் உத்தானா பாதசனம்...
தலைப்பகுதிக்கு புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக அதிக இரத்தம் செல்ல சிரசானம் ,கலாசனம் மற்றும் லிங்க பீடாசனம்...


94 வயதிலும் யோகா செய்து நன்கு வாழும் ஞானம்மாள் பத்ம விபூஷண் விருதும் பெற்றார்

உடல் முழுதையும் மனம் முழுதையும் உற்சாக படுத்தும் புத்துணர்விக்கும் ஆசனங்கள் ஏராளம் ..
நீடுடி அன்புடன் வளமுடனும் உடல் நலத்துடன் வாழ்வோம்...