பதஞ்சலி அள்ளிக்கொடுத்த அருள் கொடையாம் ஆசனங்கள்...
உடம்பை வளர்த்தேன்..உயிர் வளர்த்தேனே-திருமூலர்...
உடலில் தான் உயிர் குடிக்கொண்டுள்ளது....
உடலை வளர்க்கும் முறைகளில் ஒன்றே நம் ஆசனங்களும்...
மோடி ஒரு கேடி.. எது சொன்னாலும் தப்பாதான் இருக்கும்னு ஒரு நம்பிக்க நமக்குள்ள...சில நேரம் சிலத மட்டும் கொஞ்சம் ஒழுங்கா பண்ணாருனா அது யோகா தினம் தான்...
நம்ம முன்னோர்கள் நமக்காக சொல்லிக்கொடுத்தது...
காலை எழுந்ததும் ஒட்டு மொத்த நாள் புத்துணர்ச்சிக்கும் சூரிய வணக்கம்....
அமைதி உணர்வை பெற பத்மாசன தியானம்..
அறிவை பெருக்கிக்கொள்ள வஜ்ராசன தியானம்...
மனதை ஒருங்கிணைக்க பர்வட்டாசனம்...
வயிற்றுப்பகுதியை சீராக்கும் யோகமுத்ரா மற்றும் தனுராசனம்...
இடுப்பையும் கால்களையும் சீராக்க பவன முத்தாசனம் மற்றும் உத்தானா பாதசனம்...
தலைப்பகுதிக்கு புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக அதிக இரத்தம் செல்ல சிரசானம் ,கலாசனம் மற்றும் லிங்க பீடாசனம்...
94 வயதிலும் யோகா செய்து நன்கு வாழும் ஞானம்மாள் பத்ம விபூஷண் விருதும் பெற்றார்
உடல் முழுதையும் மனம் முழுதையும் உற்சாக படுத்தும் புத்துணர்விக்கும் ஆசனங்கள் ஏராளம் ..
நீடுடி அன்புடன் வளமுடனும் உடல் நலத்துடன் வாழ்வோம்...



No comments:
Post a Comment