Wikipedia

Search results

Thursday, 13 August 2020

ஆடி மாதமும் ,சித்த மருத்துவமும்

ஆக ஆடி மாதம் ,கோடையின் முடிவு,மழையின் தொடக்கம்..(காலம் மாறி போச்சு கண்ணுனு வசனமெல்லாம் பேசக்கூடாது..பாடத்த கவனிக்கனும்..)

ஆடி காத்துல அம்மியும் நகரும்..
ஆடிப்பட்டம் தேடி விதை…(பழமொழி..இருக்கட்டும்).

இந்த மாசத்துல வாயு(காற்று)வின் சீற்றம், பித்தத்தின் வளர்ச்சி இருக்கும்..(சித்த மருத்துவ நூல்கள் சொல்லுது குமாரு…)

இப்போ சுவை பார்ப்போம்..

அனைத்தும் பஞ்சபூதமயமாதுதானே…

மண்,நீர் ,நெருப்பு,காற்று,ஆகாயம் அல்லவோ பஞ்சபூதங்கள்…(அதுலாம் எங்களுக்கே தெரியும்…மேல சொல்லுங்கிறிங்களா)..

நம்ம சாப்பிடுற உணவுகளும் பஞ்சபூதமயம்,
அறு சுவைகளில்,ஒவ்வொரு சுவையும் ரெண்டு பஞ்சபூதம் இணைந்து உருவாகியிருக்கு….(எப்பா…புரிஞ்சுதா)…

அதாவது,

இனிப்பு – மண்+ நீர்

புளிப்பு- நெருப்பு + மண்

உப்பு – நீர் + நெருப்பு

கசப்பு – ஆகாயம் + காற்று

காரம் – நெருப்பு + காற்று

துவர்ப்பு – நிலம் + காற்று

இந்த அமைப்புலதான் இருக்கு…

ஆடி மாசம் முழுக்க காற்றோட(வாயுவோட) சீற்றம் அதிகம்..அத நம்மளோட உடம்புல தன்னிலைப்படுத்தனும்..(படுத்தலனா,வாத சம்பந்த பிரச்சனை வரும் ..பாத்துக்கோங்க..)

அதுக்கு என்னா பண்ணணும்?…

ம்ம்..காத்து பூதம் இல்லாத சுவைகள சாப்டனும்..

இப்ப காற்று இல்லாத சுவைகள் என்னன்ன

இனிப்பு புளிப்பு உப்பு இந்த சுவைகளை அதிக படுத்திக்கிட்டு,மற்றத கம்மி படுத்தி சாப்டனும்…

அம்புட்டுதான்…

ஆடி மாச விஷேஷ உணவுகள் ,அதிகமாக இந்த சுவைகள அடிப்படையா கொண்டு தான் இருக்கும்…
யோசிங்க மக்களே…

இதுல எங்க மருத்துவம் வருதுன்னு கேக்கலாம்…
End card-ae இங்கதான்…
உணவே மருந்து..மருந்தே உணவு ..

Monday, 13 January 2020

புற்றுநோய்க்கு மணத்தக்காளி?

மணத்தக்காளிக்கீரை
மணத்தக்காளி செடி (14/1/2020-10.19 am)


Solanum nigrum..

இதுக்கு காகமாசி,விடைகந்தம்,வாயசம் நிறைய பேரு இருக்கு...

நாக்குப்புண்,வாய்வேக்காடு ,வயிற்றுப்புண்களை தீர்க்கும்.
சளி இருமல் குணமாகும்..
உடம்புக்கு நல்ல நோய் எதிர்ப்பாற்றல வழங்கும்..

காகமாசி தைலம் இருமல் இரைப்புக்கு நல்ல மருந்து...


https://www.researchgate.net/publication/50865162_Solanum_nigrum_Current_Perspectives_on_Therapeutic_Properties


இதில் கிளைக்கோ ஆல்கலாய்ட்கள்,கிளைக்கோ புரதங்கள்,பாலி சாக்கரைடுகள்சொலனின்,கபியீக் அமிலம்,காலிக் அமிலம்,கேட்டசின்,எபிகேட்டசின்,புரோட்டோ கேட்டசுயிக் அமிலம்,ருடின்,நரின்ஜெனின் போன்றவைகள் உள்ளன.

இவற்றிற்கு புற்றுசெல்களை அழிக்கும் திறன் உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்..

இவற்றிள் உள்ள பழுக்காத காய்களுக்கு விஷத்தன்மை உள்ளதாகவும் கண்டறிந்துள்ளானர்...
பழுத்த பழங்களை உண்ணலாம்.

கீரையை சமைத்து உண்பதன் மூலம் சத்துக்களைப் பெறலாம்.

உணவு: