Wikipedia

Search results

Friday, 18 March 2016

ஒரு வகை தசை விறைப்பு நோய்-பொட்டுலிசம்




இது ஒரு கொடிய நோயாகும்.இவை கிளாஸ்டிரிடியம் பொட்டுலிசம் என்ற பாக்டீரியாவில் ஏற்படுகிறது.இவை மிக மோசமான உணவு நச்சேற்றத்தை ஏற்படுத்துகிறது. பொட்டுலிசம் என்றால் லத்தின் மொழியில் சாசேஜ் என்று பெயர்.இவை ஒழுங்காக சமைக்கப்படாத உணவுகளின் மூலம் நச்சேற்றத்தை ஏற்படுத்துகிறது.இந்த பாக்டீரியா மண்,விலங்குகளின் கழிவுகள்,காய்கறிகளில்,பதப்படுத்தப்பட்ட புட்டிகளில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களில் (tin foods ,cane foods which is preserved ),இறைச்சியில் ஒட்டுண்ணியாக காணப்படுகிறது.இந்த பாக்டீரியாவின் நச்சுப்பொருள் உயிரிகளைத் தாக்குவதற்கு முன்பே (preformed toxin) தயாராகிவிடுகிறது.இது மூன்று விதத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
1.உணவின் மூலம் பரவும் பொட்டுலிசம்
2.குழந்தைகளுக்கு வரும் பொட்டுலிசம்
3.புண்கள் பொட்டுலிசம்
1.உணவின் மூலம் பரவும் பொட்டுலிசம்:
சுகாதாரமற்ற ,நங்கு சமைக்காத உணவுகளில் இந்த பாக்டீரியா ஏற்படுத்துகிற நச்சின் மூலம் பரவுகிறது.இவை பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட புட்டிகளில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களில் (tin foods ,canned foods which is preserved ),இறைச்சி,காய்கறிகளில் காணப்படுகிறது. இந்த பாக்டீரியா தொற்று உணவுகளில் இருந்தால் அவற்றைத் திறக்கும்போதே  அழுகிய நாற்றத்துடன்,நுரை நுரையாக கெட்டுப்போகி காணப்படும்.இந்த உணவை அறவே நீக்க வேண்டும்.ஆனால் சிலசமயம் இந்த பாக்டீரியா தொற்றுள்ள உணவு சாதரணமாகவே காணப்படும்.சுவையிலும் எந்த மாற்றமும் காணப்படாது.
இதன் அறிகுறி, இந்த பாக்டீரியா தொற்று உணவு உண்ட 12-36 மணி நேரங்களில் தொடங்கும்.வாந்தி,தாகம்,மலச்சிக்கல்,முழுங்க,பேச,சுவாசிக்க சிரமப்படுதல்,கண்களில்  அரை குறை முடக்குவாதம்(ocular paresis),ஆகியவை அறிகுறிகளாகும்.வயிற்றுப்போக்கு இந்த தொற்றுக்கு அறிகுறியல்ல.இதன் இறப்பு விகிதம் 25-70 % .சுவாச செயலிழப்பு ஏற்பட்டு இறப்பு நிகழ்கிறது
2.குழந்தைகளுக்கு வரும் பொட்டுலிசம்:
6 மாதத்திற்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதிக்கப்டுகின்றனர்.இந்த பாக்டீரியாவின் ஸ்போர் உள்ள உணவை உட்கொள்ளுவதன் மூலம் ஏற்படுகிறது.தேன் மூலம்தான் ஏற்படுகிறது.இதன் மூலம் மலச்சிக்கல்,சோம்பல்,மூளை வாதம்(cranial palsy),பால் குடிக்க முடியாமை,உடல் நிறம் மங்கிப்போதல் (floppy baby syndrome),மூச்சு விட சிரமம் ஏற்படுகிறது.சில சமயம் இறப்பையும் ஏற்படுத்டுகிறது.
3.புண்கள் பொட்டுலிசம்;
    இது அரிதாக ஏற்படும் புண்கள் தொற்றாகும்.இந்த பாக்டீரியாவின் நச்சு,புண்கள் மூலம் இரத்தத்தில் கலந்து, முழுங்க,பேச,சுவாசிக்க சிரமப்படுதல்,கண்களில்  அரை குறை முடக்குவாதம்(ocular paresis) ஆகிய அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
தடுப்பு மருந்து:
பதப்படுத்தப்பட்ட புட்டிகளில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களை (tin foods ,canned foods which is preserved ) தவிர்க்க வேன்டும்.ஆய்வகத்தில் பணிபுரிபவர்கள் டாக்சாய்டு போட்டுகொள்ளலாம்.
சித்த மருந்துவம்:
1.பஞ்ச தீபக்கனி
2.திரிகடுகு
அல்லோபதி:
1.Supportive therapy with proper respiration
2.Antitoxin
3.Polyvalent antiserum (A B E)
  மருந்துகள் முழு நிவாரணத்திற்கு இல்லை.வாழ் நாளை நீட்டிக்கத்தான்.

  பொட்டுலிசம் ஒரு கொடிய நச்சுப்பொருள்.இது 1 மைக்ரோ கிராம் ஒரு மனிதனயே கொல்லும் திறன் கொண்டது. 3கிராம்,இந்த மொத்த உலகத்தையும் அழிக்கும் திறன் கொண்டது.
இந்த நச்சு நமது நரம்பு மண்டலத்தை (neuro toxin) மெதுவாகத்தாக்கி சில மணி நேரங்களில் இறப்பை ஏற்படுத்துகிறது. இந்த நச்சு,இரண்டு நரம்பு தசை இணையும் இடத்தில் அசிட்டைல்கோலைன் என்னும் வேதிப்பொருளை அதன் வாங்கிகளுடன்(receptor) இணையவிடாமலோ அல்லது அதன் உற்பத்தியைத் தடுத்தோ தசை இயக்கத்தைத் தடை செய்து,தசை விறைப்புத்தன்மையை ஏற்படுத்தி,சுவாச செயலிழப்பை ஏற்படுத்தி இறப்பை ஏற்படுத்துகிறது.
இந்த நச்சு,உயிர்க்கொல்லும் ஆயுதமாக (bioweapon) சில நாடுகள் பயன்படுத்தியுள்ளது.
அனைவரையும் அன்பு செய்து,அறிவியலை ஆக்கத்திற்கு மட்டும் பயன்படுத்தி பயன்பெறுவோம்.

No comments:

Post a Comment